கடவுள் ஓர்
கடவுச்சொல்
எப்படி அழைத்தாலும்
ஓர் புதிர் மட்டுமே
வெளிப்படுகிறது…
மரணம்
மரித்தவனுக்கு மட்டுமே
புரிந்த முடிச்சு..
ஓர் மரணம்
ஆத்திகவாதியை
நாத்திகமாக்கியது.
மற்றொரு மரணம்
நாத்திகவாதியை
ஆத்திகமாக்கியது.
கடவுளும் மரணமும்
பரடாக்ஸ் போல
விளக்கவும்
விலக்கவும்
முடியாத
ஒன்று…
Tuesday, April 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment