என்னை அதி காலை
எழுப்புகிறான்…
அவன் உண்கையில்
எனக்கு ஒரு வாய் தந்து
அமுதம் படைக்கிறான் ..
இது வேண்டாம்
அது உடுத்து என்று
ஆசை சொல்லி சிரிக்கிறான்…
அலுவலகம் செல்கையில்
அழகாய் கைஅசைத்து
பார்த்து போ என
கிளி பேச்சு பேசுகிறான்
அவன் வளர்கிறான்
நான் குழந்தைஆகிறேன்
தாயான
என் மகனிடம்