Thursday, February 11, 2010

வலியின் விழி

பகுத்தறிவாளனாகிய நான்

காக்கைக்கு சாதமிடுகிறேன்
அவள் பசி தீரும் என்பதால்…

சாஸ்திர‌ம் க‌ற்கிறேன்
ஊழ்வினை அறிய‌…

கடவுளை தொழுகிறேன்
அவள் அடி சேர வேண்டி…

=================

உண்ண‌ ம‌ற‌ந்தேன்
உற‌க்க‌மிழ‌ந்தேன்

உன் உயிர் என்னிட‌மிருப்ப‌தால்
என் உயிரை மட்டும்
இழ‌க்க‌ முடிய‌வில்லை…

===================

மழையில்…

உன்னை பெண்
பார்த்தேன்
அன்று கோடைமழை…

உன் கரம்
பிடித்தேன்
குற்றால சாரலிலே…

புதுவீடு
புகுந்தோம்
வருண‌பகவான் ஆசியோடு…

ஈன்றாய்
இளவேனிற் பொழுதில்…

மழை நம்
ராசி என்றாய்…

இன்று
கண்ணீர் மழையில்
நான் மட்டும்…