பகுத்தறிவாளனாகிய நான்
காக்கைக்கு சாதமிடுகிறேன்
அவள் பசி தீரும் என்பதால்…
சாஸ்திரம் கற்கிறேன்
ஊழ்வினை அறிய…
கடவுளை தொழுகிறேன்
அவள் அடி சேர வேண்டி…
=================
உண்ண மறந்தேன்
உறக்கமிழந்தேன்
உன் உயிர் என்னிடமிருப்பதால்
என் உயிரை மட்டும்
இழக்க முடியவில்லை…
===================