Tuesday, April 6, 2010
கடவுளும் மரணமும்…
கடவுள் ஓர்
கடவுச்சொல்
எப்படி அழைத்தாலும்
ஓர் புதிர் மட்டுமே
வெளிப்படுகிறது…
மரணம்
மரித்தவனுக்கு மட்டுமே
புரிந்த முடிச்சு..
ஓர் மரணம்
ஆத்திகவாதியை
நாத்திகமாக்கியது.
மற்றொரு மரணம்
நாத்திகவாதியை
ஆத்திகமாக்கியது.
கடவுளும் மரணமும்
பரடாக்ஸ் போல
விளக்கவும்
விலக்கவும்
முடியாத
ஒன்று…
கடவுச்சொல்
எப்படி அழைத்தாலும்
ஓர் புதிர் மட்டுமே
வெளிப்படுகிறது…
மரணம்
மரித்தவனுக்கு மட்டுமே
புரிந்த முடிச்சு..
ஓர் மரணம்
ஆத்திகவாதியை
நாத்திகமாக்கியது.
மற்றொரு மரணம்
நாத்திகவாதியை
ஆத்திகமாக்கியது.
கடவுளும் மரணமும்
பரடாக்ஸ் போல
விளக்கவும்
விலக்கவும்
முடியாத
ஒன்று…
அஞ்சலி
நான் படுக்கையில்
படித்திட்ட புத்தகம் நீ.
நான் படிக்கையில்
தொலைந்திட்ட புத்தகம் நீ.
கடவுள் இல்லையென்றேன்
அன்று.
நான் கைத்தொழும்
தேவியானாய் இன்று.
உன்னை குட்டிம்மா
என்றுதானே அழைத்தேன்.
நம் குழந்தைக்கு
அம்மாவாய் இல்லாததேன்?
இன்றோடு அரை வருடம்
கழிந்தது கணக்கு.
அரை நூற்றாண்டு
போலிருக்கு எனக்கு,
நீ இல்லாத நாட்கள்.
Subscribe to:
Posts (Atom)