நான் படுக்கையில்
படித்திட்ட புத்தகம் நீ.
நான் படிக்கையில்
தொலைந்திட்ட புத்தகம் நீ.
கடவுள் இல்லையென்றேன்
அன்று.
நான் கைத்தொழும்
தேவியானாய் இன்று.
உன்னை குட்டிம்மா
என்றுதானே அழைத்தேன்.
நம் குழந்தைக்கு
அம்மாவாய் இல்லாததேன்?
இன்றோடு அரை வருடம்
கழிந்தது கணக்கு.
அரை நூற்றாண்டு
போலிருக்கு எனக்கு,
நீ இல்லாத நாட்கள்.
No comments:
Post a Comment